கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா
மனித நேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, ஒரு கார் விபத்தில் சிக்கி, மயிரிழையில் உயிர் தப்பினார்.
ராமநாதபுரம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, ராமநாதபுரத்தில் இருந்து திருச்சியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தனது, மாருதி காரில் சென்றார்.
அவரது கார், காரைக்குடி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, திருமயம் அருகே வீரப்பட்டி பகுதியில் பின்புறமாக வந்த டிப்பர் லாரியில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில், கார் விபத்தில் சிக்கியது. ஆனால், மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா மயிரிழையில் உயிர் தப்பினார்.
இந்த தகவல் அறிந்த திருமயம் போலீஸார் விரைந்து சென்று லாரி டிரைவரை மடக்கிப் பிடித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.