வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (22:18 IST)

ராமதாஸ் மீது அவதூறு வழக்கு: திருமாவளவன்

ராமதாஸ் மீது அவதூறு வழக்கு: திருமாவளவன்

பாமக நிறுவனர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
 

 
சென்னை, பாரிமுனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார்.
 
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்கள் மத்தியில் மக்கள் நலக் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே,  இந்தக் கூட்டணியை வலுப்படுத்த முயற்சி செய்துவருகிறோம்.
 
எங்கள் கூட்டணிக்கு, தேமுதிக மற்றும் தமாகா ஆகிய கட்சிகள் வரும் என எதிர்பார்கிறோம். அவர்களடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர்பார்கிறோம்.
 
மேலும், மரக்காணம் கலவரத்தில் தண்டனை பெற்ற 6 பேரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று ராமதாஸ் அவதூறு பரப்புகிறார். எனவே, அவர் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளோம் என்றார்.