வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 25 நவம்பர் 2015 (07:51 IST)

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 

 
கனமழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன், செய்தியாளர்களிடம் பேசுகையில் "மாலத்தீவு அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்து விட்டது. 
 
ஆனால், இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும்" என்று கூறினார்.
 
சென்னை உள்ளிடட்ட இடங்களில், பெரும்பான்மையான இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கியுள்ளது. இதனால் மழை நீரை அப்புறப்பபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
 
இதைத் தொடர்ந்து, இன்றும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.