கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்புமையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.
இதன் வேகம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே, கனமழை பெய்வதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
இதனால், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை தமிழகம், மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.
கடலோர மாவட்டங்களில் கனமழையோ அல்லது மிக கனமழையோ பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.