1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (15:17 IST)

சசிகலாவை பாராட்டிய ராதாரவி

கர்நாடகாவிலும் ஊழல் இருக்கிறது என நிரூபித்து குழப்பத்தை ஏற்படுத்திய சசிகலாவை பாராட்டுகிறேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.


 

 
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அங்கு சிறப்பு வசதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் வெளியானது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
 
இதையடுத்து சசிகலா சிறையில் சகல வசதிகளுடன் இருக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் ராதாரவி சசிகலாவை பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
ஜனநாயகத்தில் வாக்களிப்பவர்கள் அரசை விமர்சிக்க உரிமை உண்டு. ரஜினிகாந்த் விமர்சிக்கும் போது மவுனமாக இருந்த அமைச்சர்கள், கமல்ஹாசனை விமர்சிப்பது முறையல்ல. கர்நாடகாவிலும் ஊழல் இருக்கிறது என நிரூபித்து குழப்பத்தை ஏற்படுத்திய சசிகலாவை பாராட்டுகிறேன் என்றார்.