வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (11:58 IST)

கடலுக்கு சென்றவர்கள் சடலமாக மீட்பு! – இலங்கை கடற்படை காரணமா?

புதுக்கோட்டையிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு இலங்கை கடற்படையே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது, படகுகள் சேதப்படுத்தப்படுவது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 18ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீவிர தேடுதலுக்கு பிறகு நால்வரும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை கடற்படையில் கப்பல் மீனவர்களின் படகை மோதியதால் மீனவர்கள் உயிரிழந்ததாக இறந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.