வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2019 (11:15 IST)

செம கடுப்பான தேமுதிக நிர்வாகிகள்: துரைமுருகன் வீட்டிற்கு சென்று செய்த வேலை!!!

கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பற்றி துரைமுருகன் பேசியதால் கடுப்பான தேமுதிக நிர்வாகிகள் அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினர். இதுகுறித்து துரைமுருகன் தேமுதிக தங்களிடம் கூட்டணி குறித்து பேசியதாகவும் தேமுதிகவிற்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லை என கூறிவிட்டதாக சொன்னார்.
 
இதுகுறித்து விளக்கமளித்த தேமுதிக துணை செயளாளர் சுதீஷ், எங்களது கட்சி நிர்வாகிகள் துரைமுருகனிடம் சென்றது கூட்டணி குறித்து பேச அல்ல பர்ஸ்னல் விஷயமாக பேசச் சென்றனர் என்றும் துரைமுருகன் கூறுவது உண்மை இல்லை எனவும் கூறினார்.
 
தேமுதிக கூட்டணி குறித்து பேசியிருந்தாலும் கூட துரைமுருகன் இப்படி ஒப்பனாக பேசியது தேமுதிகவினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது திமுக தேமுதிகவிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
 
இந்நிலையில் துரைமுருகன் விட்டின் முன்பாக தேமுதிக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.