வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2016 (16:19 IST)

மோடியை தூக்கிலிட்டு நூதன போரட்டம்: சேலத்தில் பரபரப்பு

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவித்த பிரதமர், 50 நாட்களுக்கு நிலைமை சீராகிவிடும் என்று தெரிவித்தார். 50 நாட்களுக்கு மேல் ஆகியும் பணத்தட்டுபாடு சரியாகமல் இருப்பதால் மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


 

 
சேலம் ராமகிருஷ்ணா சல்லையில், பிரதமர் மோடியின் முக மூடி அணிந்த உருவபொம்மையை தூக்கில் போடுவதை போன்று சித்தரித்து ஊர்வலமாக சென்றனர். பணத்தட்டுபாட்டை சரி செய்யாமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து இப்போரட்டம் நடைப்பெற்றது. 
 
மேலும் பாதுகாப்புக்காக காவல்துறையினர் அதிக அளவு குவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்கள் முன்பாகவே, மோடியை தூக்கில் இடுவது போன்று நடைபெற்ற இந்த நூதன போராட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.