வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 2 மார்ச் 2015 (16:51 IST)

ஆபாச படமெடுத்து மிரட்டிய காதலனுக்கு பணம் கொடுக்க விபச்சாரத்தில் ஈடுபட்ட மாணவி

கோவையில் உல்லாசமாக இருந்ததை ஆபாச படமெடுத்து மிரட்டிய காதலனுக்கு பணம் கொடுப்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
கோவையில் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர்கள் சந்திரமோகன், சந்திரசேகர், ராஜேஸ்வரி, துணை ஆய்வாளர்கள் சாஸ்தா மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படையினர் அந்த ஓட்டலை தீவிரமாக கண்காணித்தனர்.
 
அப்போது அந்த ஓட்டலில் விபசாரம் நடப்பது உறுதியானது. விபசாரத்தில் ஈடுபடுவோரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி அந்த ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்து அங்கிருந்த என்ஜினீயரிங் மாணவி உள்பட 3 பெண்களை காவல்துறையினர் மீட்டனர்.
 
அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கோவைப் புதூர் திருப்பதி நகரைச் சேர்ந்த பிருத்திவிராஜ்(32), அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி விஜயலட்சுமி(38) ஆகியோரை கைது செய்தனர்.

விபசாரத்துக்கு பயன்படுத்திய கார், 2 செல்போன்கள், ரொக்கம் 1 லட்சத்து 1,860 ரூபாயை பறிமுதல் செய்தனர். நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் சிக்கியவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
 
நட்சத்திர ஓட்டலில் சிக்கிய பெண்களில் ஒருவர் ஊட்டியைச் சேர்ந்தவர் ஆவார். என்ஜினீயரான அவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். பெண்கள் ஆஸ்டலில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார்.
 
கைநிறைய சம்பளம் வாங்கும் நீங்கள் ஏன் இப்படி ஒரு தவறான முடிவை மேற்கொள்ள காரணம் என்ன என்று காவல்துறையின கேட்ட போது, நான் மிகவும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டேன்.
 
அதற்கு நான் வாங்கும் சம்பளம் போதுமானதாக இல்லை. எனவே இந்த தவறான முடிவை எடுத்து விட்டேன். என்னை மன்னியுங்கள். இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என்று கூறி கண்ணீர் சிந்தினார்.
 
மற்றொரு பெண்ணிடம் விசாரித்தபோது அவர் கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். படித்து வருவது தெரியவந்தது.
 
மதுரையைச் சேர்ந்த இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவரை காதலித்திருக்கிறார். இருவரும் நெருங்கி பழகியிருக்கிறார்கள். அப்போது பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். அந்த காட்சியை வாலிபர் மாணவிக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்திருக்கிறார்.
 
சிறிது காலத்துக்குப் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் அந்த மாணவர் மீண்டும் மாணவியை சந்தித்திருக்கிறார். அப்போது, நாம் உல்லாசமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். நான் கேட்கும் பணத்தை நீ தர வேண்டும். இல்லாவிட்டால் அதனை இணையதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.
 
இணையதளத்தில் காட்சி வெளியானால் நம் மானம் போய் விடும் என்பதை உணர்ந்த அந்த மாணவி முதலில் தான் அணிந்திருந்த நகைகளை விற்று கொடுத்திருக்கிறார். அதன் பின்னரும் அந்த மாணவர் தொடர்ந்து பணம் கேட்கவே விபசாரத்தில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அந்த மாணவரிடம் கொடுத்தது தெரியவந்தது.
 
மற்றொரு பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறார். காவல்துறையினரிடம் சிக்கிய 3 பேரும் கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான விபசார கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.