வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (10:41 IST)

கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய விபச்சார அழகி

மதுரையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய விபசார அழகியை காவல்துறையினர்  கைது செய்தனர்.
 
மதுரை அவனியாபுரம் எம்எம்சி காலனி ராமு காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு வயது 32. இவரது மனைவி சரஸ்வதி.
 
இந்த தப்பதியினர் வசித்துவரும் வீட்டிற்கு, பக்கத்து வீட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அண்ணன், தங்கை என்று கூறிக்கொண்டு சத்யா, ரிக்சாட்சன் ஆகிய இருவர் குடிவந்தனர். இவர்கள் இருவரும் சந்திரன் மற்றும் அவரது மனைவியிடம் நெருங்கிப் பழகி வந்தனர்.
 
இந்நிலையில், கர்ப்பமாக இருந்த சரஸ்வதிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஆண்குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து, ரிக்சாட்சன் அந்த குழந்தைக்கு நகை வாங்கித் தருவதாக் கூறி அழைத்துள்ளார்.
 
ரிக்சாட்சனின் வார்த்தைகளை நம்பிய சந்திரன், அவரது மனைவி, பச்சிளங் குழந்தை மற்றும் சத்யா, ஆகியோர் ரிக்சாட்சனுடன ஆட்டோவில் மதுரை நகைக்கடை பஜாருக்குச் சென்று கொண்டிருந்தபோது, தனக்கு ஒரு வேலை இருப்பதாகக் கூறி சத்யா கீழவாசல் பகுதியில் இறங்கினார்.
 
மற்ற மூவரும் நகைக்கடை பஜாரில் இறங்கினர். அப்போது, ரிக்சாட்சன் ஏடிஎம் மில் பணம் எடுத்து வருவதாக கூறியுள்ளார். அப்போது அவர் குழந்தையையும் தூக்கி சென்றார். பணம் எடுக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.
 
இதனால், சந்தேகம் அடைந்த சந்திரன், இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் போரில், உதவி ஆணையர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் குழந்தையை கடத்தி சென்றவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில், குழந்தையை கடத்திய சத்யா, ரிக்சாட்சன் ஆகியோர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு குழந்தையுடன் தப்பி செல்வதாக தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையுடன் சென்னைக்கு தப்ப முயன்ற சத்யா மற்றும் ரிக்சாட்சன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
 
பின்னர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
 
குழந்தையை கடத்திய சத்யாவின் உண்மையான பெயர்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...
ராஜேஸ்வரி. 28 வயதுடைய இவர் சென்னையை சேர்ந்தவர். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.
 
2 குழந்தைகள் பிறந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி கணவரை பிரிந்தார்.  பின்னர் சென்னையை சேர்ந்த விக்டர் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார். அவரும் சிறிது காலத்தில் இறந்து விட சென்னை ராயபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
 
அப்போது தனது தாயாரின் நடவடிக்கைகள் பிடிக்காமல், அங்கிருந்து வெளியேறிய ராஜேஸ்வரி ராயபுரத்தில் யோகநாயகி என்பவருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். யோகநாயகிக்கும் மதுரையை சேர்ந்த சேகர் என்பவருக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
 
இந்நிலையில், ராஜேசுவரிக்கும் சேகருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் ராஜேஸ்வரியிடம் அடிக்கடி பேசி மதுரைக்கு வந்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜேஸ்வரி மதுரைக்கு வந்துள்ளார். அங்கு சேகருடன் திருமணம் செய்து கொள்ளாமல் ராஜேஸ்வரி குடும்பம் நடத்தியுள்ளார்.
 
பின்னர் ராஜேஸ்வரியை மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்த லட்சுமியம்மாள் என்ற விபசார புரோக்கருடன் சேகர் அனுப்பி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, விபசாரம் செய்து பணம் சம்பாதித்த ராஜேஸ்வரி பின்னர் மதுரையிலிருந்து ஈரோடிற்குச் சென்றுள்ளார். அங்கு பிரபு என்பவருடன் நெருங்கிப பழகியுள்ளார்.
 
அப்போது, பலரால் ஏமாற்றப்பட்ட ராஜேஸ்வரி, பிரபு தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடக் கூடாது என்று எண்ணி, தான் கர்ப்பமாக இருப்பதாக பொய்யான தகவலை கூறியுள்ளார். இதையடுத்து பிரபு தனது தாயார் சம்மதத்துடன் ராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் ராஜேஸ்வரிக்கு பிரபு குடும்பத்தினர் வளைகாப்பு செய்து வைத்துள்ளனர். ராஜேஸ்வரியும் வயிற்றை பெரிதாகக் காட்டி அவர்களை நம்பவைத்துள்ளார்.
 
இந்த பிரச்சனையை, இறந்த தனது 2 ஆவது கணவரின் தம்பியும், கள்ளக் காதலனுமான ரிக்சாட்சனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 பேரும் மதுரைக்கு புறப்பட்டு வந்து எம்எம்சி காலனியில் தங்கி உள்ளனர். பக்கத்து வீட்டிலிருந்த குழந்தையை கடத்திய அவர்கள் சென்னைக்கு தப்ப முயன்ற போதுதாக் கால்துறையினரிடம் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.