1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2017 (10:03 IST)

ஜெ. மதம் கொண்ட யானை; விஜயகாந்த் சினம் கொண்ட சிங்கம்: பிரேமலதா அதிரடி!

ஜெ. மதம் கொண்ட யானை; விஜயகாந்த் சினம் கொண்ட சிங்கம்: பிரேமலதா அதிரடி!

பிரதமர் மோடி கோவை வந்ததையொட்டி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தேமுதிக மகளிர் அணி தலைவியும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கோவை வந்தார். அப்போது ஊடகங்கள் அவரை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கேட்டனர்.


 
 
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஊடகங்களை சந்தித்த பிரேமலதா அரசியல் கட்சி தலைவர்களை வறுத்தெடுத்துவிட்டார். குறிப்பாக ஸ்டாலின், ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார் அவர்.
 
சில தினங்களுக்கு முன்னர் தமிழக சட்டசபையில் திமுகவினர் செய்த அமளி மற்றும் சபை அவமதிப்பு போன்றவற்றை பற்றி பேசி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். ஸ்டாலின் காமெடி அரசியல் பன்னுகிறார். சின்ன பசங்க போல சட்டை, பனியனை கிழித்துக்கொண்டு வருகிறார்கள்.
 
விஜயகாந்த் வெறும் 29 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஜெயலலிதா என்னும் மதம் கொண்ட யானையை சினம் கொண்ட சிங்கமாக ஒண்டிக்கு ஒண்டி எதிர்த்தார். ஆனால் 89 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு சட்டை பனியனை கிழித்துக்கொண்டு வெளியே வருகிறார் ஸ்டாலின் என பிரேமலதா ஒரு பிடி பிடித்தார்.