வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (20:17 IST)

தாலி அகற்றிய 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்கு செய்த சாமியார்கள்

தாலி அகற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 21 பெண்களின் கணவர்களுக்கு திருவண்ணாமலை இந்து சாமியார்கள் ஈமச்சடங்கு செய்துள்ளனர்.
 
கடந்த 14ஆம் தேதி திராவிடர் கழகத்தினர், சென்னையில் உள்ள பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில், 21 பெண்கள், தாங்கள் அணிந்திருந்த தாலியை அகற்றிக் கொண்டனர்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாலி அகற்றிய 16ஆம் நாளான நேற்று திருவண்ணாமலையில் உள்ள 21 இந்து சாமியார்கள், தாலி அகற்றிய 21 பெண்களின் கணவர்களுக்கும் ஈமச்சடங்குகள் செய்துள்ளனர்.
 
இந்த நிகழ்ச்சியை இந்து மத முறைப்படி செய்துள்ளனர். பூஜைகள் செய்தும், சிவபுராணம் பாடியும் குளத்தில் இறங்கி ஈமச்சடங்கை செய்துள்ளனர். இதனை அறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.