வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (14:25 IST)

பெரியார் விவகாரத்தில் ரஜினி பேசியது நியாயமானது - ராஜேந்திரபாலாஜி

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு திராவிட கட்சிகள்  பலத்த விமர்சனங்களை முன்வைத்தன.  தமிழக அமைச்சர்கள்  ரஜினி பேசாமல் இருப்பதே நல்லது என தெரிவிக்க அமைச்சர் செல்லூர் ராஜூ, ரஜினி மகளுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற பெரியார் தான் காரணம் என தெரிவித்தார்.
ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து தெரிவித்த கருத்து நியாயமானது தான் என தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது : முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் திமுக இந்துகளுக்கு பிரச்சனை வரும் போது கொடுப்பதில்லை என குற்றம்சாட்டினார். மேலும், பெரியார் விவகாரத்தில் ரஜினியின் கருத்துக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.