வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Modified: வியாழன், 17 ஏப்ரல் 2014 (13:12 IST)

விஜய்காந்த் மனைவி பிரேமலதா மீது போலீஸ் வழக்கு பதிவு

கோபி பேருந்து நிலையத்தில் தேமுதிக. தலைவர் விஜய்காந்த் மனைவி பிரேமலதா வாக்குகள் சேகரித்தபோது அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தைப் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை அவதூறாக பேசிய பிரேமலதா விஜயகாந்த் மற்றும் காஞ்சிகோவிலை சேர்ந்த கிட்டு என்கிற கிட்டுசாமி ஆகியோர் மீது கோபி நகர அ.தி.மு.க. செயலாளர் சையத் புடான்சா கோபி போலீசில் புகார் செய்தார்.
 
அதன்பேரில் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்துள்ளார்.
 
பிரேமலதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் தே.மு.தி.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.