செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 7 மே 2015 (11:51 IST)

பிளஸ் -2 தேர்வு முடிவுகள்: பவித்ரா மற்றும் நிவேதா முதலிடம் பெற்றனர்

பிளஸ் -2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.  திருபூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.


 


 
+2 தேர்வில் சுமார் 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவற்றில் மாணவிகள் 90. 6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலிடத்தை 2 மாணவிகளும், 2 ஆம் 4 பேரும் , 3 வது இடத்தை ஒருவரும் பிடித்துள்ளனர்.

திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா மற்றும் கோவை ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதா  ஆகிய மாணவிகள் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.
 
மாநில அளவில் 4 பேர் 2 ஆம் இடம் பெற்றுள்ளனர். இதில் விக்னேஸ்வரன், பிரவீன், சரண்ராம், வித்யவர்ஷிணி ஆகிய 4 மாணவர்கள் மாநில அளவில் 2 ஆம் இடம் பிடித்துள்ளனர். 3 ஆம் இடத்தை பாரதி என்ற மாணவி இடம்பெற்றுள்ளார்.