வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (15:34 IST)

பிளாஸ்டிக் தடை எதிரொலி: போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு

தமிழகத்தில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருசில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். மக்களும் சுற்றுச்சூழலின் நலனை கருதி மஞ்சப்பைக்கு மாற தயாராக உள்ளனர்.

ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த தடைக்கு இன்னும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர், வியாபாரிகள் சங்க தலைவர் சங்கரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 'தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் விற்பனை கடைகளை அடைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அரசு தடை விதித்த 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடன் சுமையில் இருப்பதால் 5 ஆண்டுகளுக்கு தடையை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுக்கூ தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர், வியாபாரிகள் சங்க தலைவர் சங்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.