வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (16:14 IST)

’நீயே பேசிவிட்டு போகவேண்டியது தானே?’ - பாண்டேவை திட்டி தீர்த்த பழ.கருப்பையா

’நீயே பேசிவிட்டு போகவேண்டியது தானே?’ - பாண்டேவை திட்டி தீர்த்த பழ.கருப்பையா

நியூஸ் 7 தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பழ.கருப்பையா தந்தி டிவி நெறியாளர் ரங்கராஜ் பாண்டேவை திட்டித் தீர்த்தார்.
 

 
கடந்த 27-01-206 அன்று ’அதிமுக கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட, துறைமுகம் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக’ தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்தார்.
 
இதனையடுத்து, 28ஆம் தேதி அன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக பழ.கருப்பையா செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்திருந்தார். மேலும், அதிமுக அரசுக்கு எதிரான தனது அதிர்ப்தியை தெரிவித்திருந்தார்.
 
இதனையடுத்து, பழ.கருப்பையா தந்தி டிவி சார்பாக நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு நெறியாளராக ரங்கராஜ் பாண்டே பங்கேற்றார்.
 
அப்போது, ரங்கராஜ் பாண்டே மீதான அதிருப்தியில், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே பழ.கருப்பையா வெளியேறினார். இந்நிலையில், நியூஸ் 7 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பழ.கருப்பையா, அதில் பாண்டேவை கடுமையாக விமர்சித்தார்.

வீடியோ கீழே: