வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2016 (16:34 IST)

கத்தியோடு வகுப்புக்கு வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் : 70 பேர் சஸ்பெண்ட்

கத்தியோடு வகுப்புக்கு வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் : 70 பேர் சஸ்பெண்ட்

கையில் கத்தியோடு வகுப்புக்கு வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 70 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


 

 
சென்னையில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முக்கியமானது பச்சையப்பன் கல்லூரி. தமிழகத்தில் உள்ள எந்த கல்லூரி மாணவர்களுக்கு பிரச்சனை என்றாலும் இந்த கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துவார்கள். 
 
அதேபோல், அக்கல்லூரி மாணவர்களிடையே அவ்வப்போது மோதலும் ஏற்படுவது உண்டு. இந்நிலையில், 5 மாணவர்கள் இன்று காலை கத்தியுடன் கல்லூரிக்கு வந்தது தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த நிர்வாகம் அவர்களிடம் விசாரணை நடத்தியது. அந்த விவகாரத்தில் மேலும் பல மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
 
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 மாணவர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். மேலும், இன்று மாலை முதல் நாளை வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
மாணவர்கள் கத்தியோடு கல்லூரிக்கு வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.