வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 29 மார்ச் 2017 (16:38 IST)

விவசாயிகளை கொச்சைப்படுத்தினால் அவ்வளவுதான்: தமிழிசைக்கு எச்சரிக்கை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன் என்று விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


 

 
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நிவாரண நிதி போதாது எனக் கூறி தொடர்ந்து போராட்டம் நடைப்பெற்று வருகிறது. 
 
இதைத்தொடர்ந்து இன்று நடைப்பெற்ற போராட்டத்தில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்துக்கொண்டார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
 
தமிழக விவசாயிகளின் போரட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசி வருகிறார். இனிமேல் அவர் விவசாயிகளை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். முடிந்தால் விவசாயிகளுக்காக பிரதமர் மோடியிடம் எடுத்து சொல்லி நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க பாருங்கள், என கூறினார்.