வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:09 IST)

ஓபிஎஸ் கட்டாயப்படுத்தி ராஜினாமா: மறைமுகமாக ஒப்புக்கொண்ட சசிகலா!

ஓபிஎஸ் கட்டாயப்படுத்தி ராஜினாமா: மறைமுகமாக ஒப்புக்கொண்ட சசிகலா!

தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்ததை சசிகலா தனது பேட்டியின் போது மறைமுகமாக அவருக்கே தெரியாமல் ஒப்புக்கொண்டார்.


 
 
தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5-ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக 7-ஆம் தேதி கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில் இதற்கு பதில் அளித்த சசிகலா யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என கூறினார். ஆனால் இன்று அதிமுக தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சசிகலா பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தது போல் பொருள்படும் படியாக பேசியுள்ளார்.
 
அவர் பேசும் போது, சட்டசபையில் ஓபிஎஸ்ஸின் நடவடிக்கை எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உங்களுக்கே எங்கள் ஆதரவு, நாங்கள் இருக்கிறோம் என ஓபிஎஸ்ஸிடம் துரைமுருகன் கூறினார். ஆனால், அதற்கு ஓபிஎஸ் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. உங்கள் ஆதரவு தேவையில்லை என அவர் கூறியிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
 
எனவே, இதற்கு மேல் விட்டால் சரிவராது என நான் முடிவெடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலைக்கு தள்ளியவர் ஓபிஎஸ்தான் என கூறினார். சசிகலாவின் இந்த பேச்சு என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என ஓபிஎஸ் கூறியதை உண்மையாக்கியுள்ளது. அவர் தானாக முன்வந்து சசிகலாவை முதலமைச்சராக்க ராஜினாமா செய்யவில்லை என்பது தெளிவாகிறது.