வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2017 (11:51 IST)

சசிகலா தரப்பு நெருக்கடி ; வாடகைக்கு வீடு தேடும் ஓ.பி.எஸ்

சசிகலா தரப்பு தரும் நெருக்கடி காரணாக, அரசு தனக்கு ஒதுக்கியுள்ள வீட்டை விட்டு, வாடகைக்கு வீடு தேடும் நிலைக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தள்ளப்பட்டுள்ளார்.


 


ஓ.பி.எஸ் தற்போது சென்னை கிரீன்வேஸ் சாலையில், அரசு அவருக்கு ஒதுக்கியுள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். சசிகலாவிற்கு எதிராக அவர் களம் இறங்கினார். ஆனால், ஆட்சியை அவரால் தக்க வைத்துக் கொள்ளமுடியவில்லை. சசிகலா நியமித்த எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
மேலும், கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஓ.பி.எஸ் அணியை சசிகலா நீக்கினார். ஆனால், அது செல்லாது என ஓ.பி.எஸ் அணி கூறி வருகிறது.  
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் தங்கியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்யும் படி தமிழக அரசு அவருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. சசிகலா ஆதரவு பெற்ற அரசு நடப்பதால், அரசு தரப்பில் அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக தெரிகிறது. அதேபோல், அவரது வீட்டின் முன்பு இருந்த அறிவிப்பு பலகையும் 2 நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. 
 
தனது வீட்டை காலி செய்ய 6 மாதம் அவகாசம் கொடுக்கும் படி ஓ.பி.எஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு அரசிடமிருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை எனத்தெரிகிறது. எனவே, வீட்டை உடனடியாக காலி செய்யும் நிலைக்கு ஓ.பி.எஸ் தள்ளப்பட்டுள்ளார். இதற்காக அவர் வீடு வாடைகைக்கு தேடும் நிலைக்கு வந்துள்ளார். இது அவரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.