வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (15:45 IST)

விரைவில் அம்மா சேனல்: ஓபிஎஸ் முடிவு!!

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று ஒரு டெலிவிஷன் சேனல்களை நடத்துகின்றன. 


 
 
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி புதிய டெலிவிஷன் சேனல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளது. 
 
‘அம்மா டி.வி.’ என்ற பெயரில் 24 மணி நேர செய்தி சேனல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் நுங்கம்பாக்கத்தில்  தேர்வு செய்யப்பட்டு வருவதாக ஓ.பி.எஸ். அணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.