வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (08:26 IST)

ஓணம் திருநாள்: ஆளுநர் ரோசய்யா வாழ்த்து

நாட்டினுடைய உயர்ந்த மரபுகள், கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச்செல்வோம் என்று கூறி தமிழக ஆளுநர் கே.ரோசய்யா ஓணம் திருநாள் வாத்து கூறியுள்ளார்.  
 
ரோசய்யா கூறியுள்ள ஓணம் திருநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்களுக்கும், நாட்டின் பிற பகுதிகளிலும், உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இந்த அறுவடைத் திருநாள் அமைதி, ஒற்றுமை, செழிப்பு ஆகியவற்றை அனைத்து வகையிலும் கொண்டுவரட்டும். நமது நாட்டினுடைய உயர்ந்த மரபுகள், கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச்செல்வோம். இவ்வாறு கே.ரோசய்யா தனது வாழ்த்து செத்தியில் கூறியுள்ளார்.