வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2016 (21:25 IST)

தபால் வாக்குகள் கிடையாது - தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழகத்தில் தஞ்சை உட்பட 3 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தல்களில் தபால் வாக்கு கிடையாது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


 

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா காரணமாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து 3 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் 3 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் தபால் வாக்குகள் கிடையாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.