வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 26 ஜூன் 2017 (11:36 IST)

ஜெயலலிதா இருந்த வரை.. துரைமுருகன் உருக்கம்...

சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது இருந்த கட்டுப்பாடு தற்போது இல்லை என திமுக மூத்த தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் வேலூர் மாவட்டம் ராணிப்பேடையில் திமுக சார்பாக ஒரு பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர் துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி அமைக்கும். அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். அதில் யார் யார் எல்லாம் சிக்குவார்கள் எனத் தெரியாது என கூறினார்.
 
அதன் பின் பேசிய துரைமுருகன் “கருணாநிதி  நலமுடன் இருக்கிறார். நாள்தோறும் செய்திதாள்களை வாசிக்க சொல்லி நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார். சட்டசபையில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பதால் அதிமுக உறுப்பினர்கள் அவர் அவர் இஷ்டத்திற்கு செயல்படுகின்றனர். அவர் இருந்த போது இருந்த கட்டுப்பாடு இப்போது இல்லை” என கூறினார்.