வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (12:58 IST)

’ சிறையில் கொண்டாட்டம் : பரிசுகளை அள்ளிய நிர்மலா தேவி ’

மாணவிகளை தவறான பாதைக்குச் செல்ல தூண்டியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேராசிரியை நிர்மலா தேவி. 
அருப்புக்கோட்டை கலைக்கல்லூரியில்  பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி ஆவார். அப்போது தவறான பாதைக்குச் செல்ல மாணவிகளுக்கு மூளைச் சலவை செய்ததாக அவர் மீது புகார் வந்தது . இதற்கான ஆடியோ ஆதாரம் போலீஸாரின் கைகளில் கிடைக்கவே போலீஸார் அவரை கைது செய்தனர்.
 
தற்போது இவ்வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.  இது குறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியானது. 
 
இந்நிலையில் சிறையில் 200 நாட்களுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவிக்கு இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. நிர்மலா தேவி மதுரை மத்திய  பெண்கள் சிறையில் அடைக்கப்படுள்ளார்.
 
நேற்று( மார்ச் 8) சிறையில்கொண்டாடப்பட்டது. அப்போது பல பெண் கைதிகளுக்குப் போட்டி நடைபெற்றது. இதில் பேராசிரியை நிர்மலாதேவியும் கலந்து கொண்டு போட்டிகளில் பரிசுகளை வென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.