வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2016 (10:55 IST)

பூட்டிய காருக்குள் பிணமாகக்கிடந்த காண்டிராக்டர்: நெற்குன்றத்தில் பரபரப்பு

சென்னை நெற்குன்றத்தில் பூட்டிய காருக்குள் காண்டிராக்டர் பிணமாகக் கிடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
சென்னை கோயம்பேட்டை அடுத்துள்ள நெற்குன்றம், பாலவிநாயகர் நகர், ஜீவா தெருவில் வசித்து வந்தவர் செல்வமணி. அலுமினிய தச்சுத் தொழில் காண்டிராக்டராக இருந்த வந்தார்.
 
இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். செல்வமணிக்கு குடிப்பழக் கம் இருந்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
 
கடந்த 10 ஆம் தேதி வழக்கம் போல் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் செல்வமணி, வீட்டில் இருந்து கோபமாக வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
 
மனைவியிடம் சண்டை போட்டுவிட்ட வெளியே செல்லும் போதெல்லாம் செல்வமணி ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிடுவார்.
 
அதைத் தொடர்ந்து, அவரே வீட்டுக்கு திரும்பி வந்து விடுவார். இதனால் ஜெயந்தியும், கணவர் வீடு திரும்பாதது குறித்து கண்டுகொள்ளவில்லை.
 
இந்நிலையில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த ஒரு காரில் உடல் உப்பிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக கோயம்பேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
 
ததைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த காரை ஆய்வு செய்தனர். அப்போது, உட்புறமாக அது பூட்டப்பட்டிருந்தது.
 
ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப் பர்த்த அப்பகுதியின் ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அது செல்வமணிக்குச் சொந்தமான கார் என்பதும், காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது செல்வமணிதான் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
செல்வமணி மனைவியுடன் சண்டை போட்டபடி சென்றபோது அளவுக்கு அதிகமாக குடித்து இருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவரது மர்மச் சாவுக்கான காரணம் குறித்து தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
இது குறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
காண்டிராக்டர் செல்வமணி பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.