நாம் தமிழர் கட்சியின் 3ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
தமிழகத்தில், நாம் தமிழர் கட்சி போட்டியிடும் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழ்ப் பேரினத்தின் கலைஅடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 14ஆம் ஆண்டு நினைவெழுச்சி பொதுக் கூட்டம் ஜூலை 26ஆம் தேதி அன்று சென்னை, மயிலாப்பூர், மாங்கொல்லையில் நடைபெற்றது.
இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சியுரையாற்றினார். இதில் சிவாஜி சமூக நலப்பேரவைத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பங்கு பெற்றனர்.
இந்த பொதுக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 5 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். அதன் விவரம் இதோ:-
வேளச்சேரி தொகுதி - வழக்கறிஞர் வடிவேல்,
மயிலாப்பூர் தொகுதி - ஸ்டாலின்,
ஆயிரம் விளக்கு தொகுதி - முருகேசன்,
திரு.வி.க நகர் தொகுதி - கௌரி,
திருத்தணி தொகுதி - பிரபு.
ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி சார்பில் 2 முறை 34 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.