வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:35 IST)

வளர்ப்பு மகனை அறிவித்ததே என் தந்தையின் மரணத்திற்கு காரணம் - தீபா பேட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது வளர்ப்பு மகன் என சுதாகரனை தத்து எடுத்ததே, தனது தந்தையின் மரணத்திற்கு காரணம் என ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பேட்டியளித்துள்ளார்.


 

 
ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நான் 10 வருடங்களுக்கு முன்பு எனது அத்தை ஜெயலலிதாவை போயஸ் கார்டன் சென்று அடிக்கடி சந்தித்து பேசியிருக்கிறேன்.
 
என்னைத்தான் அவர் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என என் தந்தை விரும்பினார். ஆனால் எனது அத்தையோ சுதாகரனை தத்தெடுத்ததாக செய்திகள் வெளியானது. மேலும்,  சுதாகரனின் திருமணத்தை அவர் நடத்தப்போவதாகவும் தெரிய வந்தது.
 
இது எனது தந்தையின் மனதை மிகவும் பாதித்தது. அதுவே அவரின் மரணத்திற்கும் காரணமாக அமைந்தது.