வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (17:50 IST)

மதுரையில் இன்று பகலில் 3 பேர் வெட்டிக் கொலை

மதுரை மீனாம்பிகை நகரில் இன்று பட்டப்பகலில் 3 பேர் அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர்.
 
கொலை செய்யப்பட்டவர்கள் நாகராஜ், கருப்பு மற்றும் மணி எனத் தெரிய வந்துள்ளது.
 
இன்று அதிகாலை மதுரையில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஒருவர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி. மற்றொருவர் திமுக பிரமுகர் கருப்பையா ஆவார்.
 
இச்சம்பவம் நடைபெற்ற சிலமணி நேரத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.