வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (12:19 IST)

உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்றவரின் பரபரப்பு வாக்குமூலம்

தூத்துக்குடியில் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபபரப்பை ஏற்படுத்திது. பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அருகில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தூத்துகுடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காளீஸ்வரியின் கள்ளக்காதலன் ஜோசப்ராஜ் தான் கழுத்தை அறுத்துகொலைசெய்தான் என்று கண்டுபிடித்தனர்.
 
தூத்துக்குடி அருகே உள்ள லெவிஞ்சிபுரம் 2 ஆவது தெருவை சேர்ந்தவர் ஜெகதீசுவரன். இவர் தூத்துக்குடியில் திருச்செந்தூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் குடோன் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி காளீசுவரி (வயது 28).
 
இவர்களுக்கு சக்தி விவாசனா (9) என்ற மகளும், சக்தி தியானேஷ்குமார், சக்தி ஸ்ரீவிகாஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். 3 குழந்தைகளும் பிரையண்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள். காளீசுவரி தினமும் காலையில், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவார்.
 
நேற்று காலை வழக்கம்போல் காளீசுவரி 3 குழந்தைகளையும் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பினார்.
 
நேற்று சனிக்கிழமை என்பதால், பள்ளி வகுப்புகள் மதியத்துடன் முடிவடைந்தது. குழந்தைகள் 3 பேரும், தங்களை அழைத்துச் செல்ல தாய் வருவார் என எதிர்பார்த்து பள்ளியிலேயே காத்து இருந்தார்கள். ஆனால் வெகுநேரம் ஆகியும் குழந்தைகளை அழைத்துச் செல்ல காளீசுவரி பள்ளிக்கு செல்லவில்லை.
 
குழந்தைகள் 3 பேரும் நீண்டநேரமாக காத்து இருப்பதை ஆசிரியர்கள் கவனித்தனர். இதுபற்றி குழந்தைகளின் தாயார் காளீசுவரிக்கு போன் செய்தனர். ஆனால் போனை எடுத்து யாரும் பேசவில்லை. இதற்கிடையே காளீசுவரியின் தாயும், காளீசுவரிக்கு போன் செய்து உள்ளார். அப்போதும் போனை எடுக்கவில்லை.
 
இதையடுத்து காளீசுவரியின் தாய் லெவிஞ்சிபுரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் கட்ட காட்சி நெஞ்சை பதறச் செய்தது. காளீசுவரி படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மகளை பிணக்கோலத்தில் பார்த்த அவர் கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், துணை ஆய்வாளர் ரென்னிஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
 
காளீசுவரி கொலை செய்யப்பட்டு கிடந்த அறையில் பீரோவில் இருந்த சேலைகள் அவர் மீது விழுந்து கிடந்தன. காளீசுவரியின் கழுத்தில் கிடந்த சுமார் 4½ பவுன் தங்க சங்கிலியையும் காணவில்லையாம். எனவே நகைக்காக கொலை நடந்து இருக்கலாம் என்று காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
 
இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து நகையை பறித்து சென்ற மர்ம மனிதர்கள் பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
 
காளீஸ்வரியை கொலை செய்தது யார் என்று விசாரணை நடத்திய போது அவரை அவரது கள்ளக்காதலன் தூத்துக்குடி பிரையண்ட்நகர் 8 ஆவது தெருவை சேர்ந்த ஜோசப்ராஜ் (24) என்பது தெரியவந்தது.
 
அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
 
அப்போது ஜோசப்ராஜ் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–
 
நான் தூத்துக்குடியில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறேன். சிலிண்டர் போடுவதற்காக காளீஸ்வரி வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அப்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நான் அவ்வப்போது காளீஸ்வரி வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருப்பேன்.
 
இதனிடையே எனக்கும் கார்த்திகா என்பவருக்கும் திருமணம் ஆகியது. எங்களுக்கு 9 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. திருமணமான பிறகும் காளீஸ்வரியுடனான பழக்கத்தை கைவிடவில்லை. இதையறிந்த எனது மனைவி என்னை சத்தம் போட்டார். மேலும் காளீஸ்வரியை சந்தித்து கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்.
 
இந்த விவகாரத்தினால் எனது மனைவி என்னை பிரிந்து சென்று விட்டார். எனது பெற்றோரும் என்னை பிரிந்து சென்று விட்டார். நான் மட்டும் தனியாக வசித்து வந்தேன்.
 
நேற்று காலை காளீஸ்வரியை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றேன். வீட்டில் யாரும் இல்லாததால் அவரை உல்லாசத்துக்கு அழைத்தேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். பல முறை அழைத்தும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நான் உன்னால்தான் எனது மனைவி, பெற்றோர் பிரிந்து சென்று விட்டனர். நான் இப்படி தன்னந்தனியாக இருப்பதற்கு நீதான் காரணம் என்று கூறி அவருடன் தகராறு செய்தேன்.
 
தகராறு முற்றவே ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து காளீஸ்வரி கழுத்தை அறுத்தேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையை மறைப்பதற்காக அவர் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து விட்டு தப்பிசென்றுவிட்டேன். காவல்துறையினர் நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நினைத்து விடுவார்கள் என்று எண்ணினேன். ஆனால் காவல்துறையினர் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர் என்று அவர் கூறினார்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.