திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (09:33 IST)

கொலையா? - ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மரணத்தில் வாக்குமூலம் அளித்த பிரபாகரன் காணவில்லை

கொலையா? - ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மரணத்தில் வாக்குமூலம் அளித்த பிரபாகரன் காணவில்லை

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா கடந்த 2011 ஆம் ஆண்டு மர்மான முறையில் உயிரிழந்தார்.


 


2 ஜி வழக்கில் சாதிக் பாட்ஷாவை சி.பி.ஐ விசாரித்துவந்த போது, அவரை கொன்றதாகவும், இதில், ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரும் உடந்தையாக இருந்ததாகவும் பிரபாகரன் என்ற இளைஞர் கடந்த மே 17 ஆம் தேதி வாக்குமூலம் அளித்தார்.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அவரை தொடர்பு கொண்ட போது, அவர் மாயமானது தெரியவந்தது. அவருடைய குடும்பத்தினருக்கும் அவருடைய இருப்பிடம் தெரியவில்லை என சி.பி.ஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், தமிழக காவல்துறையினரும் இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.