1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (14:29 IST)

எம்.பிக்கள் தங்கள் சொத்துக்களை விற்றாவதும் ’ கடனை ’ அடைக்கணும் - பொன் ராதாகிருஷ்ணன்

37 எம்பிகளும் தங்களது சொத்துக்களை விற்றாவதும் விவசாயிகளின் கடனை அடைக்க வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். இது ஒரு தனிப்பட்ட கட்சியின் பிரச்சனை அல்ல. நாம் நாட்டின் பிரச்ச்னை என்று தெரிவித்தார்.
 
தமிழ்நாட்டில் சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 37 எம்பிக்களூம் தங்களது சொத்துக்களை விற்றாவது விவசாய கடன், கல்விக் கடனைத் அடைக்க வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் காவிரி மேலாண்மை உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீர் கிடைக்கும்! தற்போது வெற்றிபெற்றுள்ள எம்பிக்கள் கர்நாடகம் சென்று கூட்டணிக்கட்சியிடம் பேசி அணைகளைத் திறக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.