வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 4 ஜூன் 2016 (15:34 IST)

கள்ளக்காதல் மோகத்தில் 3 வயது குழந்தையை கொன்ற கல் நெஞ்ச தாய்

கோவையில் கோடூர தாய் ஒருவர் தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக பெற்ற குழந்தையை கொலை செய்துள்ளார்.


 

 
நீலகிரி மாவட்டத்தில் குந்தா பகுதியில் அரவிந்குமார், திவ்யா ஆகியோர் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்திகொண்டிருந்தனர். இவர்களுக்கு ஹரிவாசா என்று 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்தது. கணவன் மனைவி இருவருக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் திவ்யா தன் மகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
 
கணவனை விட்டு பிரிந்த திவ்யா, தன் தாய் வீட்டில் இருந்த படி வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்ற இடத்தில் அங்கு ஒரு இளைஞருடன் காதல் ஏற்பட்டு அவருடன் தொடர்பு வைத்து வந்துள்ளார். இதனை அறிந்த திவ்யா பெற்றோர், குழந்தைக்கு தாயான பின் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் இப்படி கள்ளக்காதல் கூடாது என்று திவ்யாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
 
இதனால் திவ்யா கள்ளக்காதல் மோகத்தால் குழந்தை இருப்பது தானே பிரச்சனை என்று எண்ணி குழந்தை தூங்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். குழந்தை தூக்கத்தில் அசைவு இல்லாமல் கிடந்ததையடுத்து திவ்யாவின் அண்ணன் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு சென்றுள்ளார்.
 
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குழந்தையின் தாய் திவ்யாவிடம் விசாரணை செய்தபோது, திவ்யா முரண்பாடன பதில்களை கூறியுள்ளார்.
 
இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் திவ்யாவிடம் தீவிரமாக விசாரித்த போது, திவ்யா உண்மையை ஒப்புக் கொண்டார். தன் கள்ளக்காதலை தொடர குழந்தை இடையூறாக இருந்ததால் கொன்றுவிடேன் என்று கூறியுள்ளார்.