வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2017 (17:31 IST)

பணம் பட்டுவாடா செய்த தினகரன் ஆதரவாளர் கைது

சென்னை ஆர்.கே.நகரில் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக அம்மா அணி ஆதரவாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 

 
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைப்பெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தினகரன், தீபா, ஓபிஎஸ் என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
 
ஆர்.கே.நகரில் வாக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளருக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ, சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதையடுத்து காவல்துறையினர் வீடியோ பதிவின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில் சசிகலா தரப்பு அதிமுக அம்மா அணி ஆதரவாளர் கருணாமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் வீடியோ உள்ள நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தினகரன் அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்வதாக தொடர்ந்து வந்த புகாரை அடுத்து தற்போது தினகரன ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.