ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தால் எந்த பிரயோஜனமும் இருக்காது: மு.க.அழகிரி
மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தால் எந்த பிரயோஜனமும் இருக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மு.க.அழகிரி மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் மு.க.அழகிரியை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அழகிரி பதிலளித்தார்.
கேள்வி:- மதிமுக வில் இருந்து முன்னணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகிறார்களே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- நான் திமுகவில் இல்லை. எனவே எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது.
கேள்வி:- திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத்தின் முதல் கட்ட பயணம் வெற்றி அடைந்து இருப்பதாகச் சொல்லுகிறார்களே?
பதில்:- அது ஒரு காமெடி டைம். அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது. இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.