வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (16:24 IST)

திமுக ஆட்சியில் இனி சிறு தவறு கூட நடக்காது: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எதிராக இனி ஒரு சிறு தவறு கூட நடக்காது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.



நமக்கு நாமே பயணத்தில் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஸ்டாலின், கோழி பண்ணையாளர்களை சநதித்தார். அப்போது அவரிடம் பண்ணையாளர்களாக இருந்த எங்களை அதிமுக அரசு அடிமைகளாக மாற்றி விட்டது. ஒரு சிலரிடமிருந்து கமிஷன் பெறுவதற்காக, தரமில்லாத முட்டையை அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால், ஒரு நாளைக்கு ஒரு கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டினார்கள். 

பின்னர் பேசிய ஸ்டாலின், உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் நிறைவேற்றித்தரப்பபடும் என்றும் வெளிப்படையான முட்டை கொள்முதல் ஏல முறை பின்பற்றப்படும் என அவர் உறுதி அளித்தார். மேலும்,  இனி திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எதிராக சிறு தவறு கூட நடக்காது என்று அவர் கூறினார்.