வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2017 (11:41 IST)

திராணி இருந்தால் ஓ.பி.எஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்கள் - சீறிய மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆளும், சசிகலா தரப்பு மீது பல பகீரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
இது குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  “முதல்வரை சசிகலா செயல்படவிடவில்லை என்பதைதான் திமுக தொடர்ந்து சொல்லிக்கொண்டு வந்தது. அதையே ஓபிஎஸ் தன்னுடைய பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்த முதலமைச்சரையே மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
 
அதிமுகவிற்குள் “சிரிப்பாய் சிரிக்கும் காட்சிகளுக்கு”என்னைப் பார்த்து ஓ.பி.எஸ் சிரித்ததுதான் காரணம் என்று சசிகலா கூறுவது வெட்கக்கேடானது என அவருடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
 
அதற்கு சிலர், திமுகவை கிண்டலடித்து சில கருத்துகளை பதிவு செய்தனர். இதற்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின் “ ஓபிஎஸ் பட்ட அவமானங்களை அம்மையார் சமாதி முன்பு நின்று பட்டியலிட்டிருக்கிறார். திராணி இருந்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் திமுகவை சீண்டாதீர்கள்” என டிவிட்டரில் சீறியுள்ளார்.