வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூலை 2019 (11:54 IST)

”அது போன மாசம், இது இந்த மாசம்”…வேலூர் தொகுதி குறித்து ராஜேந்திர பாலாஜி

வேலூர் தொகுதி சென்ற மாதம் தான் திமுகவின் கோட்டையாக இருந்தது எனவும், தற்போது இல்லை எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சிவகாசியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விழா முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வேலூரில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை குறித்து கேள்வி எழுப்பியபோது, வேலூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று பலர் கூறிவருகிறார்கள், ஆனால் அது போன மாதம் தான். இப்போது வேலூர் தொகுதி அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அதுவும் உறுதியான எக்கு கோட்டையாக உள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் வேலூர் தேர்தலில் அதிமுக–விற்கான வெற்றி வாய்ப்பு வலுவாக உள்ளது எனவும், இனிமேல் திமுக எந்த தேர்தலிலும் போட்டியிடத் தயங்கும் அளவிற்கு வேலூர் தேர்தலில் அதிமுக-வின்  வெற்றி அமையவுள்ளது எனவும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..