1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2015 (13:25 IST)

சட்டசபை கூட்டத்தொடரில் சிரிப்பலையை ஏற்படுத்திய அமைச்சர்

நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது அமைச்சரின் பதிலால், சிரிப்பலை எழுந்தது.
 
கேள்விநேரத்தின் போது ஆண்டிப்பட்டி தொகுதி மேகமலை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு புதைவடம் மூலம் மின்சாரம் வழங்குவது குறித்து வினா எழுப்பிய ஆளும் கட்சி உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், “அம்மா ஆட்சியில் இல்லை, முடியாது, கிடையாது என்ற வார்த்தையே அகராதியில் இல்லை என்றார்.
 
அடுத்த சில நிமிடங்களில் வேளாண்மைத்துறை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் வைத்திலிங்கம், ’அரியலூர் தொகுதி திருமானூர் ஒன்றியப் பகுதியில் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை’ என்றார். இதனால் அவையில் எதிர் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து சிரிப்பலை எழுந்தது.