வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (09:45 IST)

தினகரனின் குக்கர் பழைய இரும்புக்கடைக்குதான் போகும்: அமைச்சர் ஜெயகுமார்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் டிடிவி தினகரன், தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டவுடனே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்

மேலும் எதிரிகளுக்கு பிரஷரை வரவழைக்கவே பிரஷர் குக்கர் சின்னம் பெற்றதாக கூறினார். அவர் கையில் குக்கரை வைத்துக்கொண்டே பிரச்சாரம் செய்வத் அத்தொகுதி மக்களை கவர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டிடிவி தினகரனின் பிரஷர் குக்கர் இறுதியாக இரும்புக் கடைக்குதான் போகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அதிமுக பணிமணையில் அதிக மணி நேரம் முதலைமச்ச்ர் ஆலோசனை நடத்தி வருவது தேர்தல் அழுத்ததால் அல்ல என்றும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தான் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்