1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2017 (10:04 IST)

வேலைவெட்டி இல்லாதவர்கள் என்னை பற்றி மீம்ஸ் போடுகின்றனர். ஜெயக்குமார்

வேலைவெட்டி இல்லாத சிலர் நான் சொல்லிய கருத்துக்களை திரித்து மீம்ஸ் போட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்



 
 
பெரிய மழை பெய்தால் தண்ணீர் தேங்கும், பின்னர் கால்வாய் வழியாக வெளியேறிவிடும் என்றுதான் நான் கூறினேன். ஆனால் மழை பெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் என்று மட்டும் நான் கூறியதாக சில வேலைவெட்டி இல்லாதவர்கல் மீம்ஸ் போட்டுள்ளனர். 
 
திமுகவில் உள்ள ஐடி விங், தினகரன் குரூப்பில் உள்ள ஐடி விங் மற்றும் சிலர் இந்த வேலையை செய்து வருவதாகவும் பொதுமக்கள் யாரும் எங்களை குறை கூறி மீம்ஸ் போடுவதில்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்