1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 8 ஜூன் 2016 (12:32 IST)

ஆம்புலன்ஸில் "திருமணம்" - அதிசய காதலர்கள்

ஆம்புலன்ஸில் "திருமணம்" - அதிசய காதலர்கள்

உடல்நலம் குன்றிய காதலியை ஆம்புலன்ஸில் வைத்து காதலன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் வசித்து வருபவர் நேத்ராவதி. இவர் நர்ஸிங் டிப்ளமோ படித்து வந்தார். மேலும், குருசாமி என்ற இளைஞர் மீது காதல் கொண்டு அவரை காதலித்து வந்தார்.
 
இந்நிலையில், சித்ரதுர்கா கோட்டையை சுற்றிப் பார்க்கச் சென்ற நேத்ராவதி, கால்தவறி கீழே விழுந்தார். இதனால், அவரது முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. உடனே அவருக்கு பெங்களூரூ நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், சித்ரதுர்காவில், முருகராஜேந்திர ப்ரிஹான்  மடத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு ஜோடிகளுக்கு திருமணம் செய்யப்பட்ட போது, நேத்ராவதிக்கும் - குருசாமிக்கும் திருமணம் செய்து கொண்டனர்.
 
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், திருமணம் நடைபெறும் இடத்துக்கு, ஆம்புலன்சில் நேத்ராவதி செல்ல, அவருக்காக, பட்டுவேட்டி, பட்டுச்சட்டையில் காத்திருந்த மணமகன் குருசாமி மகிழ்ச்சியோடு நேத்ராவதி கழுத்தில் தாலிக்கட்டினார். இந்த காதல் ஜோடிக்கு அங்கிருந்த அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
 
அந்த அதிசய காதலர்கள் திருமண வீடியோ இதோ:- 
 
நன்றி:- THE NEWS MINUTE