1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 7 டிசம்பர் 2016 (11:36 IST)

ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே செல்ஃபி எடுத்த நபர்!

ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே செல்ஃபி எடுத்த நபர்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் மருத்துவ போராட்டத்துக்கு பின்னர் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.


 
 
இவரது இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் உடல் அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மத சம்பிரதாயங்களை முடித்த பின்னர், அதிகாலையில் ராஜாஜி மாஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
 
அவரது உடலுக்கு தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். தொண்டர்கள், மக்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில் ஒரு நபர் செல்ஃபி எடுத்துள்ளார். அவர் செல்ஃபி எடுக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.