1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 26 மார்ச் 2016 (09:48 IST)

ஜி.கே.வாசன் - மக்கள் நல கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

ஜி.கே.வாசனை மக்கள் நல கூட்டணி தலைவர்களான வைகோ, தொல். திருமாவளவன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.


 

 
தேமுதிகவுடன் மக்கள் நல கூட்டணி தேர்தல் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. அதன்படி, விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்க தீர்மானிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், தங்கள் கூட்டணிக்கு வருமாறு தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது.
 
சென்னை எழும்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைகோவின் நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சி,  நடைபெற்றது.
 
இந்த திருமணத்தில் வைகோ, தொல். திருமாவளவன் ஆகிய மக்கள் நல கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.
 
அந்த நிகழ்ச்சிக்கு ஜி.கே.வாசனும் வந்திருந்தார். இதனையடுத்து வைகோ, திருமாவளவன் ஆகியோர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினர்.
 
இந்த சந்திப்பின்போது, அரசியல் சூழ்நிலை குறித்தும் பேசியதாகவும், தங்கள் கூட்டணியில் இணையுமாறு வைகோ, திருமாவளவன் ஆகியோர் அழைத்ததாகவும் கூறப்படுகின்றது.
 
 ஜி.கே.வாசன் அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், மக்கள் நல கூட்டணி தலைவர்களின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.