வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2015 (19:03 IST)

ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக பூஜ்யம்தான் - மு.க அழகிரி பகிரங்க பேட்டி

ஸ்டாலினை முன்னிறுத்தினால் சட்டமன்றத்தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும், ஸ்டாலினை விட திமுகவில் கலைஞருக்குத்தான் செல்வாக்கு அதிகம் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். இதை திமுக வில் இருக்கும் ஒரு ஆண் மகனாலும் கூற முடியாது எனவும் கூறியுள்ளார்.

 
மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு  கனவு காண்கிறார் என்றும். தற்போது வெளியாகி உள்ள கருத்துக்கணிப்பு ஸ்டாலின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது என்றும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மு.க.அழகிரி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், திமுக என்றால் தலைவர் கலைஞர்தான். கலைஞர் என்றால் திமுக. திமுகவில் கருணாநிதி இல்லை என்றால் மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
 
தற்போது திமுகவில் பணம் இருப்பவர்களுக்குத்தான் செல்வாக்கு அதிகம் மற்றும் மரியாதையும் கூட. திமுகவில் கடுமையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
 
திமுகவில் நடக்கும் சில உண்மைகளையும், நியாயத்தையும் பேசியதால்தான் நான் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன். நாடாளுமன்றத் தேர்தலில்  ஸ்டாலினை முன்னிறுத்தியதால் வட்டம் வாங்கியது.  சட்டமன்றத்தேர்தலில் முன்னிறுத்தினால் மா வட்டம் தான் திமுக வாங்கும் என மு.க.அழகிரி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.