1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 28 ஜனவரி 2017 (11:01 IST)

5 வயது சிறுமியை இடித்த லாரிக்கு தீவைப்பு

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி லாரி மோதி உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து லாரிக்கு தீ வைத்தனர்.


 

 
சென்னை வியாசர்பாடி மேகசின்புரம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், தனது மனைவி மற்றும் 5 வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்று திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பின்னே வந்த லாரி மோதியதில், மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
 
இதில் காயமடைந்த 5 வயது சிறுமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பிரேம்குமார் மற்றும் அவரது மனைவியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிக்கு தீவைத்து எரித்தனர்.
 
லாரி முழுதுவம் கருகியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், லாரி ஓட்டுநரை கைது செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.