வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (13:36 IST)

‘அப்பா எப்படி குடிக்கிறேன் பார் குடி குடி’ - குழந்தைக்கு மதுவை திணிக்கும் கொடூர தந்தை

‘அப்பா எப்படி குடிக்கிறேன் பார் குடி குடி’ - குழந்தைக்கு மதுவை திணிக்கும் கொடூர தந்தை

ஒரு குடிகார தந்தை தன் குழந்தைக்கு மதுவை திணிக்கும் கொடூர வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை அருகே, கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்து மது குடிக்கும் இளைஞர்கள் 3 வயது சிறுவனுக்கு மதுவை ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

தற்போது, பெற்ற தந்தையே பிஞ்சு குழந்தைக்கு பீர், பிராந்தி பாட்டிலை கொடுத்து ”குடி குடி” என கூறுவதும் பீர் பாட்டிலை குழந்தையின் வாயில் திணித்து குடிக்கச் சொல்வதும் ”இதோ இங்கே பார், அப்பா எப்படி குடிக்கிறேன் பார்” என குடித்துக் காட்டுவதுமான ஒரு கொடுமையான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற அபத்தமான செயல்களை தடுக்க, ஒரே தீர்வு தமிழகத்திலும் புதிச்சேரியிலும் பூரண மது விலக்கு அமல் படுத்துவே என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.