1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (12:21 IST)

உள்ளாட்சி இடைத் தேர்தல்: டாஸ்மாக் கடைகள் மூடல்

உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் சில்லரை மதுபான விற்பனை கடைகள், மதுபான கடைகள் மற்றும் பார்கள் இன்று (16ம் தேதி) முதல் 18 ஆம் தேதி மாலை 5மணி வரையில் முடப்படுகிறது.

அதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22 ஆம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்ப்ட உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இடங்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.