வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 13 ஜனவரி 2016 (22:20 IST)

இலக்கிய ஆர்வலர்களுக்கு விருது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

இலக்கிய ஆர்வலர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
 

 
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்தவர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருது பெறுவர்கள் விவரம் இதோ:
 
1. திருவள்ளுவர் விருது - 2016  முனைவர் வி.ஜி. சந்தோசம்.
 
2. தந்தை பெரியார் விருது – 2015 வி.ஆர். வேங்கன்தருமபுரி.
 
3. அண்ணல் அம்பேத்கர் விருது-2015  எ. பொன்னுசாமி.
 
4. பேரறிஞர் அண்ணா விருது – 2015 பேராசிரியர் முனைவர்பர்வத ரெஜினா பாப்பா காரைக்குடி.
 
5. பெருந்தலைவர் காமராசர் விருது – 2015 மருத்துவர் இரா. வேங்கடசாமி காந்தி நிகேதன் தே. கல்லுப்பட்டி.
 
6. மகாகவி பாரதியார் விருது – 2015 கவிஞர் பொன்னடியான்.
 
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது – 2015 முனைவர் வீ. ரேணுகாதேவி,மதுரை.
 
8. தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது – 2015 கி. வைத்தியநாதன்-ஆசிரியர், தினமணி.
 
9. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - 2015 இரா.கோ. இராசாராம் மதுரை
 
இந்த விருதுகளை  ஜனவரி 16 ஆம் தேதி சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழகஅரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும்.
 
இந்த விருது பெறுவோருக்கு தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும்.